இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் 80 பணியிடங்களை காலியாக வைத்திருக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, புதுக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில்,‘தமிழக அரசு 30.5. 2014ல் ஓர் அரசாணை வெளியிட்டது.

அதில் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பிஎட் மற்றும் டிஇடி ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்ணிற்கு கருணை (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்குவதாகவும், இந்த மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் கூறப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வி முறைக்கும், தற்போதைய கல்வி முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதேபோல் மதிப்பெண் கணக்கிடுவதிலும் வேறுபாடு உள்ளது.

தற்போது சுலபமான பாடமுறை பின்பற்றப்படுவதால் அதிக மதிப்பெண் பெற முடிகிறது. ஆனால் முன்பு கடினமான பாடத்திட்டத்தால் அதிக மதிப்பெண் பெறமுடியவில்லை. அந்த உத்தரவில் பதிவுமூப்பு மற்றும் அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட வில்லை. இந்த அரசாணையில் எங்களுக்குரிய வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

டிஇடி தேர்வின் அடிப்படையில் சமமான அளவீட்டு முறையை பின்பற்ற வேண்டும். எங்களை தகுதி பெற்றவர்களாக அறிவித்து, வேலை வழங்க உத்தரவிடவேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும் என கூறப்பட் டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, �ஆசிரியர் பணி நியமனங்களுக்காக கவுன்சலிங் நடத்தினாலும், பணி நியமனங்கள் செய்யக்கூடாது� என இடைக்கால தடை விதித்திருந்தார். இதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளை யில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில், பிரதான மனுக்கள் அனைத்தும் நீதிபதி கே.கே.சசிதரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, �சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நியமனங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். மனுதாரர்களுக்காக 80 இடங்களை காலி வைத்திருக்கிறோம்’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, “மனுதாரர்களின் நலன் காக்கப்பட வேண்டும். நியமனங்களுக்கு இடையூறாக நீதிமன்றம் இருப்பதை விரும்பவில்லை. எனவே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களில் 80 பணியிடங் களை டிஆர்பி காலியாக வைத்திருக்க வேண்டும்,“ எனக் கூறி மனு மீதான விசாரணையை அக். 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Post a Comment

25 Comments

  1. காலம் உள்ளவரை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றி.நன்றி...நன்றி...... எங்களை ஒன்றினைத்த மணியரசன் சாருக்கும் அவரை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்...நன்றி.நன்றி...நன்றி......

    ReplyDelete
    Replies
    1. DEAR MR.SELECTEDMADURAITET,GO71 , ON THE OTHER DAY U JUMPED LIKE ANY THING AS IF U KNEW EVERY THING AND ALL CASES CAME TO AN END ON WEDNESDAY ITSELF

      SEE WHAT HAPPENED GETTING INFORMATION IN A TEA SHOP AND PUBLISHING IS NOT EASY MAN

      IF U REALISE UR MISTAKE I NEED BOTH OF U TO PUT A PUBLIC APOLOGY TO VIJAYAKUMAR CHENNAI IN KALVISEITHI AND THIS BLOG .

      LET ME SEE UR GENEROSITY GENTLEMEN

      Delete
    2. IF SELECTED CANDIDATE BLOG FEELS IT HAVE HURT MR,VIJAY'S FEELINGS ON WEDNESDAY AN APOLOGY ARTICLE WILL SUFFICE OUR TRUE FEELINGS

      ANY HOW I CONGRATULATE ALL MY SELECTED FRIENDS A PROSPEROUS JOB CARRER IN THEIR LIFE

      Delete
    3. 1600 salary poocham. earr kattadu

      Delete
    4. Tetpassdandidates 201326 September 2014 06:42
      2013 தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற துரதிர்ஷ்டசாலிகள் போல் இந்த உலகில் யாரும் இல்லை.நரகம் எப்படி இருக்கும் என்று கேட்டால் அதை முழுமையாக உணர்ந்தவர்கள் நாங்கள் மட்டுமே. இது தலைவிதியா? சே....என்ன வாழ்க்கைடா இது.

      Delete
    5. TN GOVT AND TN COURT WELL PLAYED ABOVE 90 WHO TO LOOSING JOB.................

      ELLAM SAGA VENDIYATHU THAN

      Delete
    6. நான் பள்ளியில் தேர்வு பணியை கண்கானித்து வருகிறேன்

      Delete
  2. பத்து பைசா செலவில்லாமல்
    யாருடைய சிபாரிசும் இல்லாமல் அரசு வேலை வாங்க முடியும் என்றால்,....
    அது புரட்சித் தலைவி மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சியில் மட்டுமே, ,ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றிவைத்த அம்மா அவர்களுக்கு நீண்ட ஆயுளை அருள எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஆயுளை அவர் கொடுத்தால் ஆட்சியை நாங்கள் தந்துவிடுவோம்.
    அம்மாவின் நல்லாட்சி தொடர எங்களின் வாழ்த்துக்கள்.
    ஒரு நண்பனைப்போல இரவு பகலாக உடனிருந்து ஆறுதல் அளித்த Selected candidates. Com அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  3. இன்று ஆசிரியர் என்ற மிகப்பெரிய பொறுப்பேற்கப்போகும் அனைவருக்கும் (எனக்கும் சேர்த்து )வாழ்த்துக்கள். பணியில் வெற்றி மேல் வெற்றி குவிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நமது பணி சிறக்கட்டும்...புதிய சரித்திரம் படைப்போம் ...என்றும் வாழ்த்துக்கள் உடன் உங்கள் அன்பு நண்பண் ....பிரபு ....

    ReplyDelete
  5. Asiriyar pani arapani atharke unnai arpani....ENDRUM ANBUDAN ARUL.G

    ReplyDelete
  6. Sir second list chance eruka sir?

    ReplyDelete
  7. sir monday join pannalama sir

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    தங்கள் ஆசிரியர் பனி சிறக்கட்டும்
    ஆல் டீச்சர்ஸ் கலக்குங்கடோவ்

    ReplyDelete
    Replies
    1. சித்தப்பூ எந்த பள்ளி

      Delete
  9. Please tell about second list?

    ReplyDelete
  10. Anybody explain me.
    Yesterday (5%relaxtion cancelled) judgement is applicable for paper 1 minorities & ADWS list.
    TRB already publish the notification of vacant posts.
    If aplicable ! Y the partciality of minoritie & ADWS list only.
    We r mentaly upset.
    Govt give the clear explaination otherwise we r also fill a cause.

    ReplyDelete
  11. Pls friend's anybody telme Monday join pannalama thavirka mudiyadha soolnilai yarenum deeo office il ullavargal visarithu sollaum pls

    ReplyDelete
    Replies
    1. 1mnth varai tm iruku no prblm
      eppa venumnalum join panikanga apnmnt odr la bck side iruku parunga 30days tm endru doubt irundhal parunga

      Delete
    2. Jai sir thank you your reply

      Delete
  12. Paper 1 secnd list when wil be publishd? Pls..,

    ReplyDelete
  13. HAI FRNDS.................HAPPY.....................HAPPY.............

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Hai Friends, anybody(ladies) select MELATHANGAL GOVN HIGH SCHOOL,Peranamallur Taluk, Thiruvannamalai?

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..