அரசு உத்தரவு அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்

தமிழகத்தில் செயல்படும் அனைத்து வகை நர்சரி, பிரைமரி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக அரசு அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என சட்டம் இயற்றியது. ஆனால் அதற்கு தமிழகத்தில் ஆதரவு இருந்தாலும் சிலர் குறை கூறினர். இந்நிலையில், தற்போது ஆட்சி யில் உள்ள அதிமுக அரசு மேற்கண்ட சட்டத்தை அடிப்படையாக கொண்டு கடந்த 18ம் தேதி ஒரு உத்தரவை தயாரித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் செயல்படும் அனைத்து நர்சரி, பிரைமரி, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், தனிப் பட்ட நபரோ அல்லது அமைப்போ நடத்தும் சிறுபான்மை பள்ளிகள் ஆகியவை அனைத் திலும் தமிழ் ஒரு பாடமாக நடத்தப்பட வேண்டும். மத்திய அரசின் 2009ம் ஆண்டு சட்டம் 35ல் குறிப்பிட்டுள்ள சிறப்பு பிரிவு பள்ளிகள் கேந்திரிய வித்தியாலயா 40, நவோதயா பள்ளிகள் 2, சைனிக் பள்ளி 1 அடங்கும்.

சிபிஎஸ்இ பள்ளிகளும் நடத்த வேண்டும்

தமிழகத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக அரசு அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என சட்டம் இயற்றியது. ஆனால் அதற்கு தமிழகத்தில் ஆதரவு இருந்தாலும் சிலர் குறை கூறினர். இந்நிலையில், தற்போது ஆட்சி யில் உள்ள அதிமுக அரசு மேற்கண்ட சட்டத்தை அடிப்படையாக கொண்டு கடந்த 18ம் தேதி ஒரு உத்தரவை தயாரித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் செயல்படும் அனைத்து நர்சரி, பிரைமரி, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், தனிப் பட்ட நபரோ அல்லது அமைப்போ நடத்தும் சிறுபான்மை பள்ளிகள் ஆகியவை அனைத் திலும் தமிழ் ஒரு பாடமாக நடத்தப்பட வேண்டும். மத்திய அரசின் 2009ம் ஆண்டு சட்டம் 35ல் குறிப்பிட்டுள்ள சிறப்பு பிரிவு பள்ளிகள் கேந்திரிய வித்தியாலயா 40, நவோதயா பள்ளிகள் 2, சைனிக் பள்ளி 1 அடங்கும்.

அவை தவிர தமிழக அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் செயல்படும் 565 சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழை ஒரு பாடமாக நடத்த வேண்டும்.
அதிகாரிகளுக்கே தெரியாத உத்தரவு

தமிழக அரசின் உத்தரவு குறித்து சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்துவோர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசின் பள்ளிகளை தமிழக அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சி இது. மேலும் இந்த உத்தரவு தங்களை கட்டுப்படுத்தாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்த உத்தரவு கடந்த 18ம் தேதி பள்ளிக் கல்வித்துறை தயாரித்துள்ளது.

இது குறித்து தொடக்க கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர், மேனிலைப் பள்ளிகள் இயக்குநர் ஆகியோரிடம் கேட்டபோது இதுகுறித்து தங்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்று பதில் கூறினர். கல்வித்துறை அதிகாரிகளுக்கே தெரியாமல் இப்படி ஒரு உத்தரவு கடந்த 18ம் தேதி வெளியாகியுள்ளது வேடிக்கை.

Post a Comment

3 Comments

  1. நண்பர்களே இந்த முக்கியமான தருணத்தில் நாம் ஒருவருக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம் அவர்தான் திரு காசிநாதன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தான் நமக்கு நிறைய கோர்ட் விஷயங்களை கூறுவார் அனால் கமன்ட் இட மாட்டார் நமக்காக நேரடியாக கோர்ட் சென்றார் நாற்பத்தி ஐந்து வயதான அவர் tet இல் 107 மதிப்பெண்கள் பெற்றார் தன ஊருக்கு அருகிலேயே பணியும் பெற்றார் அவர் இன்று காலையில் நம் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறினார் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நமக்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் இது அனைவருக்கும் தெரியும் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் அவரை வாழ்த்தியே ஆக வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் திரு காசிலிங்கம் அவர்களே உங்கள் சேவை என்றும் தொடரட்டும் .

    ReplyDelete
  2. Thank you very much, Kasinathan Sir!!!

    ReplyDelete
  3. My heartfelt gratitude Mr.Kasinathan sir, may God give you more and more success in your life for your good heart sir. Hope you be happy getting job near your place. I Thank all your family members too.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..