முதல் மதிப்பெண் பெற்றவர்கள்

நண்பர்களே!

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிகள் வெளியான உடன் மாநில அளவில் மாவட்ட அளவில் பள்ளியளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் சிலகாலம் பெருமையாக பேசப்படுவார்கள்.ஆனால் அடுத்தடுத்த தேர்வு முடிவுகள் வரும்போது அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.


அவ்வாறு முதல் மதிப்பெண் பெற்றவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள்? வாழ்க்கையில் வெற்றி பெற்றார்களா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. இதை ஏன் சொல்கிறேன் என்றால் சில நாட்களுக்கு முன் என்னுடன் பயின்ற நண்பனை சந்திக்க நேர்ந்தது.(பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்)

தற்போது நல்ல வேலையில் இருப்பான் என்று நினைத்து அவனிடம் கேட்டபோது அவன் சொன்ன பதில் மிகுந்த மனவேதனையை தந்தது.மிகக்குறைந்த சம்பளத்தில் ஒரு மில்லுக்கு வேலைக்கு போவதாக தெரிவித்தான்.பள்ளியில் இடைவேளையில் சிறுநீர் கழிக்க செல்லும்போதும் கையில் பாடப்புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருப்பான். ஆனால் இன்று அவனது நிலையறிந்து சிந்திக்க வேண்டியுள்ளது.

கல்வியின் பயனை சிறந்த வழியில் பயன்படுத்தவும் கற்றுக்கொள்வோம்.
உங்களிடம் கற்கும் குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருங்கள்.

Post a Comment

0 Comments