தமிழகத்தில் மாணவர்களின் வாசிப்பு திறன் அதிகரிப்பு .


தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம்
வாசிப்புத்திறன் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்.
தமிழக கிராமப்புற
பள்ளி மாணவர்களிடம், தமிழ், ஆங்கிலம்
வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளதாக,
தனியார் நிறுவன ஆய்வில் தெரிய
வந்துள்ளது.பிரதம் என்ற தன்னார்வ
தொண்டு நிறுவனம், 2006 முதல்


கிராமங்களில் உள்ள குழந்தைகள்
பள்ளிக்கு செல்லுதல்; அவர்கள் கற்றல்
திறன் குறித்து ஆய்வுசெய்து, ஏசர்
என்ற தலைப்பில் வெளியிடுகிறது.
இந்த ஆண்டு, நாடு முழுவதும், 577
மாவட்டங்கள்; 16,497 கிராமங்களில்,
மூன்று முதல், 16 வயதுக்குட்பட்ட, 5,70
லட்சம் குழந்தைகளிடம்
ஆய்வு நடந்தது.நாடு முழுவதும்
கட்டாய கல்விச் சட்டம்
அறிமுகமாகி உள்ள நிலையில், ஏசர்
குழு, 15,206 அரசுப் பள்ளிகளையும்
ஆய்வில் சேர்த்துக் கொண்டது.
தமிழகத்தில் 29 மாவட்டங்கள்; 823
கிராமங்கள்; 17,335 வீடுகள்;3571, 3 - 5
வயதில் 3571; 6 - 14 வயதில்,13, 948; 15 - 16
வயதுடைய 2,674 குழந்தைகளிடம்
ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு முடிவுகள்:
* 6 - 14 வயதில், பள்ளி சேராத
குழந்தைகள் எண்ணிக்கை 2013
ஆண்டை விட, 2014ல்
சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும்,
தேசிய அளவை விட மிக குறைவாக
உள்ளது.
* 6 - 14 வயதில், தனியார் பள்ளிகளில்
சேர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை,
ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது.
2014ல், 31.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது, தேசிய அளவான 30.8 சதவீதம்
என்பதைவிட அதிகம்.
* மூன்றாம் வகுப்பு மாணவர்களில்,
முதல் வகுப்பு தமிழ்
பாடத்தை வாசிக்கும் திறன்
பெற்றவர்கள் எண்ணிக்கை, 2013ல், 29
சதவீதம்; 2014ல், 37.9 சதவீதமாக
அதிகரித்துள்ளது.
* ஐந்தாம் வகுப்பு மாணவர்களில்,
இரண்டாம் வகுப்பு தமிழ்
பாடத்தை வாசிக்கும் திறன்
பெற்றவர்கள் எண்ணிக்கை 2013ல், 31.9
சதவீதம்; 2014ல், 46.9 சதவீதமாக
அதிகரித்து உள்ளது.
* கணித பாடத்தை படிக்கும் மாணவர்கள்
எண்ணிக்கையும் கணிசமாக
உயர்ந்துள்ளது.
* ஐந்தாம் வகுப்பு மாணவர்களின்,
ஆங்கில வார்த்தைகளை வாசிக்கும்
திறன், 2013ல், 57.7 சதவீதம்; 2014ல், 65.8
சதவீதமாக அதிகரித்துள்ளது. இது,
தேசிய அளவான 49.2 சதவீதத்தை விட
அதிகம்.
* மூன்றாம் வகுப்பு மாணவர்களின்
ஆங்கில வார்த்தைகள்
வாசிப்பு திறனும் அதிகரித்துள்ளது.


Post a Comment

0 Comments