தொழிலை எவ்வாறு தேர்வு செய்வது?

ஸ்டார்ட் அப் தொடரின் முதல் வார கட்டுரையை படித்த வாசகர் ஒருவர், ”தொழில் துவங்குவதற்கு விருப்பம்தான் முக்கியம் என்றும், மேலும் செய்யும் தொழிலை காதலிக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தீர்கள். ஆனால் என்னை போன்றவர்கள் தொழில் செய்ய ஆர்வமாக உள்ளோம்.

என்ன தொழில் செய்வது என்றுதான் தெரியவில்லை. என்னைப் போன்று பல நண்பர்கள் உள்ளனர். எங்களுக்கெல்லாம் என்ன கூற விரும்புகிறீர்கள்?” என்று மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தார். இது போல் பலர் இருப்பது ஆச்சரியமான விஷயம் அல்ல. இந்நிலைதான் தொழில் செய்ய விரும்புவோர்களின் முதல்கட்ட பயணம். இவர்கள் தங்களுடைய விருப்பத்தை/ கனவை நனவாக்க அடுத்தகட்டத்தில் கால் பதிக்க வேண்டும்.
வழிகள்
தொழில் சார்ந்த உண்மைக் கதைகள் பலவற்றை பத்திரிகைகள் மூலமாகப் படிக்க வேண்டும்; அல்லது வெற்றியடைந்த தொழிலதிபர்களின் சுயசரிதத்தைக்கூடப் படிக்கலாம். அடுத்த கட்டமாக தங்கள் சொந்தபந்தத்தில் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் தொழில் செய்பவர்களைப் பார்த்து நேரடியாக உரையாட வேண்டும்.
இவை தவிர, TiE (www.tie.org) போன்ற அமைப்புகளில் சேர்ந்து கொண்டால் தொழில் செய்ய விரும்பும் உங்களை போன்ற பலரை அந்த அமைப்புகளில் சந்திப்பதற்கு வாய்ப்புள்ளது. நீங்கள் தொழில் செய்யத் துடிக்கும் மாணவராக இருந்தால், பல கல்லூரிகளில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு அமைப்புகள் (ENTREPRENEURSHIP DEVELOPMENT CELL) உள்ளன.
அதன் முலம் உங்கள் இளம் வயதிலேயே தொழில் செய்வது பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் சுற்று வட்டாரத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான/ நீங்கள் மதிக்கக் கூடிய நபரை உங்களின் மானசீக குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள்! அவரிடம் தொழில்கள் ஆரம்பிப்பது பற்றிய உங்களது பல்வேறு கருத்துகளை/ எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இது தவிர உங்கள் நகரத்தில் நடக்கும் துறைசார்ந்த வர்த்தக கண்காட்சிகளுக்கு செல்வதன் மூலமும் நீங்கள் பயன் பெறலாம். தனி நபர் ஒருவர் தொழிலை தேர்ந்தெடுப்பதற்காக உண்டான வழிமுறைகளை பற்றி மேலே கண்டோம். பொதுவாக தொழில் அதிபர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு தொழில்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று பார்ப்போம்.
குடும்பத் தொழில்
ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருக்கும் குடும்பங்களில் இருந்து வருபவர்கள், அவர்கள் குடும்பம் செய்து கொண்டிருக்கும் தொழில்களையோ அல்லது அதை சார்ந்த தொழில்களையோ செய்வார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அத்தொழிலைப் பற்றிய பரிச்சயம் அதிகமாக இருக்கும்.
இன்னும் சிலர் தாங்கள் பல ஆண்டுகள் வேலை பார்த்து விட்டு, அத்தொழிலைப் பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொண்டு, அதே துறையிலேயே தொழில் துவங்குவர். பல பெரிய தொழில்களை ஆரம்பித்தவர்கள் இந்த வகையில் உள்ளனர். இன்னும் சிலரோ தனக்கு தெரிந்தவர்கள் அனைவரும் ஒரே துறையிலேயே தொழில் செய்கிறார்கள், ஆகவே அதிலிருந்து தான் சிறிது மாறுபட்டு செய்ய வேண்டும் என்று எண்ணி குடும்ப தொழில்களில் இருந்து சற்று விலகி ஆரம்பிப்பர்.
திடீர் முடிவு
சில சமயங்களில் தான் மிகவும் ரசித்து அனுபவித்து செய்த வேலை திடீரென்று பறிபோனபின் என்ன செய்வது என்று திக்குமுக்காடி நிற்கும் பொழுது, வேறு வழியே இல்லை என்று தொழிலில் இறங்குவர். மற்றொரு வகையினரோ எதிர்வரும் வாய்ப்புகளை அறிந்து கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு இத்துறைதான் என்று இல்லை, வாய்ப்புகள் அதிகமாக உள்ள எந்த துறையாக இருந்தாலும் துணிந்து இறங்குவர்.
நீங்கள் எப்படிப் பட்டவர்? எதற்காக தொழிலில் இறங்க விரும்புகிறீர்கள்? அன்றாட செலவுகளை சமாளிப்பதற்காகவா? அல்லது பல நூறு கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவா? அல்லது அத்தொழிலை/ அத்துறையை நான் மிகவும் நேசிக்கிறேன்; எனது வாழ்வே அதுதான்; பணம் இல்லாவிட்டாலும் நான் சாகும் வரை அத்தொழிலை தான் செய்ய விரும்புகிறேன் என்று நினைப்பவரா? அல்லது இத்தொழிலை/ இச்செயலை லாப கண்ணோட்டம் இல்லாமல், இச்சமுதாயத்திற்காக செய்ய விரும்புகிறேன் என நினைப்பவரா நீங்கள்? இதில் எந்த ரகம் நீங்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.
பலரும் தொழில் செய்ய முனையும் போதே தான் ரிலையன்ஸ் அம்பானி போல ஆகவேண்டும்; பில்கேட்ஸ் போல ஆகவேண்டும் என விரும்புகிறார்கள். அவ்வாறு விரும்புவதில் தவறு இல்லை. ஆனால் அது நீங்கள் செய்யப்போகும் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கு பாதகமாக ஆகிவிடக்கூடாது.
இரண்டு வாய்ப்புகள்
இன்று தொழில் செய்ய விரும்புவோர்கள் இரண்டு வகைகளில் தொழிலை தேர்ந்தெடுக்கலாம்.
உங்களுக்கு பரிச்சயமான தொழில்களை, அனுபவம் உள்ள தொழில்களை, விவரம் தெரிந்த தொழில்களை ஆரம்பியுங்கள். அதில் சற்று லாபம் குறைந்து இருந்தாலும் பரவாயில்லை. உங்களின் உழைப்பு அதிகமாக தேவைப்பட்டாலும் பரவாயில்லை.
இதுபோன்ற தொழில்களில் உங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை (CONVICTION) கிடைக்கும். பெரும்பாலானோருக்கு இந்த அப்ரோச் மிகவும் பொருந்தும். இந்தியா போன்ற நாடுகளில் பழைய தொழில்களிலேயே புதிய யுக்தியை கொண்டு வந்து, பெரிய அளவில் நீங்கள் இறங்கும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு வாய்ப்புகள் ஏராளம். காய்கறி பழங்கள் விற்கும் பழமுதிர்ச்சோலை கான்செப்ட்டை எண்ணிப்பாருங்கள். எவ்வளவு பெரிய வெற்றி?
இன்று இந்தியாவில் பல நகரங்களில் வீட்டில் ஆகும் ரிப்பேர்களை சரிசெய்ய சரியான முறையில் நிறுவனங்கள் இல்லை. பிளம்பர், எலக்ட்ரீஷியன், பெயிண்டர், கார்ப்பெண்டர் போன்றவர்களை ஆன் டிமாண்டில் (ON DEMAND) தருவது இன்னும் பெரிய அளவில் வளரவில்லை. வீட்டில் ஆகும் சிறிய தினசரி ரிப்பேர்களுக்கு இன்சூரன்ஸ் தரும் நிறுவனங்கள் இல்லை.
வேலை ஆட்களுக்கு ரெஃபரென்ஸ் (REFERENCE) தரும் நல்ல இணையதளங்கள்/ நிறுவனங்கள் இல்லை. அந்தந்த நகரங்களில் நல்ல டாக்டர்களை ரெஃபர் (REFER) செய்வதற்கு நிறுவனங்கள் இல்லை/ இணையதளங்கள் இல்லை. இதைப் போல் எவ்வளவோ பிஸினஸ் வாய்ப்புகளைக் கூறிக் கொண்டே செல்லலாம்.
பார்ட்னர்ஷிப்
அதிக வாய்ப்புகள், வளர்ச்சி, லாபம் இருக்கக்கூடிய தொழிலை பாருங்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கும்பொழுது உங்களுக்கு அத்தொழிலில் பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். அத்தொழிலில் உள்ள வளர்ச்சியும் வாய்ப்புகளும் உங்களின் அனுபவமற்ற நிலையை ஈடுகட்டிவிடும். உங்களுக்கு அத்துறையில் அனுபவமில்லாவிட்டால், அத்துறையில் அனுபவம் உள்ள ஒருவரை பார்ட்னராக்கிக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் நிதித் துறையில் வல்லவர் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நீங்கள் செய்யவிரும்பும் பிஸினஸ் வீடு கட்டி கொடுப்பது என வைத்துக் கொண்டால். உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சிவில் என்ஜினியரை பார்ட்னராகவோ அல்லது பணியாளராகவோ எடுத்துக் கொள்ளலாம். முதன்முதலாக தொழில் செய்ய விரும்புவோர்கள் தங்களுக்கு பரிச்சயமான தொழில்களில் இறங்குவது சாலச் சிறந்தது.
இன்றைய தலைமுறையில் தொழில் செய்ய வேண்டும் என்றால் பல லட்சங்கள் கோடிகள் வேண்டும் என்று நினைக்கின்றனர். அது உண்மையல்ல; இன்றைய அறிவு சார் பொருளாதாரத்தில் உங்கள் மூளை ஒன்றே முதலீடாகப் போதும்.
இளைய தலைமுறையினர் தொழில்களில் இறங்கும் முன்பு தங்களுக்கு பரிச்சயம் இல்லாத பட்சத்தில், ஓரிரு ஆண்டுகள் அந்த புதிய தொழிலில் வேலை செய்து கற்றுக்கொண்ட பின் ஆரம்பித்தால் தொழில் செய்வது இலகுவாக அமையும். இக்கூற்று புதிய மற்றும் பழைய பொருளாதார தொழில்கள் இரண்டிற்கும் பொருந்தும்.
வாருங்கள் தோழர்களே, இன்னும் என்ன யோசனை? இனி வரும் வாரத்தில் தொழிலில் இறங்கும் முன் உங்கள் நிதியை எப்படி திட்டமிட்டு கொள்வது என்பது பற்றிப் பார்ப்போம்!
www.prakala.com

Post a Comment

9 Comments

  1. Hai friends goodmorning to all. Have a wonderful day .

    ReplyDelete
  2. RL LIST 2015

    JAN>1,5,14,31
    FEB>3,17,18
    MAR>4
    APR>2,5,14,
    MAY>3,16
    JUN>2,19
    JUL>14
    AUG>3,28,29,30
    SEP>17,23
    OCT>15
    NOV>2,10,25
    DEC>24,26,31

    ReplyDelete
  3. Arasu madhukadai (TASMAC)
    Bar vasadhi undu
    parking vasadhi undu
    Ac vasadhi undu


    Arasu maruthuvamanai il
    thevaiyana marundhu kidaikadhu
    muraiyana parking vasadhi
    kidaiyadhu

    Fan vasadhi kidaiyadhu
    idhuthan enadhu
    INDIA

    unmaithane?


    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. படித்து பாருங்கள் உங்களுக்கு மெய்
    சிலிர்த்துபோகும் !!

    கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?
    (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

    இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்
    கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள
    வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும்
    கோயில்களுக்கு மட்டும் தான் இது.

    பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
    எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:

    பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த
    கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

    கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

    முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
    இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும்
    பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

    நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும். அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

    அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும்
    தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும்
    ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும்
    ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும்
    என்று.

    அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும்
    காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான்
    மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட
    சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

    மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.. அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்).. அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

    அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும்
    அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும்
    கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு,
    தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள்
    செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும்
    எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய்
    போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம்
    செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது..

    ReplyDelete

  6. அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த
    எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள்,
    கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்),
    குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம்
    ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல்
    எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட
    அதில் உள்ள மகிமை மிக அதிகம்.
    தை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும்
    காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த
    உடம்பை புண்ணியமாக்க; மீதி இரண்டு சொட்டு உங்கள்
    உடம்பை பரிசுத்தமாக்க.
    இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும்
    இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அற்புதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

    கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

    கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும்
    போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக
    எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த
    ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள். அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்
    அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும்
    போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம்
    இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில்
    சேரும் என்பது ஐதீகம்.

    பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
    நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய
    நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட
    கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார்
    சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம்
    இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன்
    எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
    கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.

    எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில்
    ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும்
    சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின்
    மூலஸ்தானம்.

    அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால்
    அது மிகையாகது..


    கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

    அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம்
    கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட
    லைட்னிங் அரெஸ்டர்ஸ்..

    அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும்
    இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும்
    இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில்
    கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால்
    எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும்
    ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர்..

    இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான்..

    கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும்
    சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. சில கோயில்களில்
    இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த
    எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற
    மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி...

    ReplyDelete
  7. உடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்! | 4Tamil News - பெண்களுக்கான பலனகள்: நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து, நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு, நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி, மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி, மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம், மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள், மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம், மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர், இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு, வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை,வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம், நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம், கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்,இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம், தலை – பேராசை, பொறாமை குணம், தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை, தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம், தொப்புள் – ஆடம்பரம், படாடோபம், வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை, அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள், இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள், வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை.

    Gd nt

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..