வள்ளுவரின் பார்வையில் கல்வி

இன்றைய உலகில் இன்றிய மையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும்.
எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள் ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அத்தியா வசிய தேவையாக இருக்கிறது.
கல்வியின் சிறப்புப் பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப் படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே ஆகும்.
கற்றவனுக்கு தனது நாடு ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். இப்படி கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது மிகவும் சிரமமானதாகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.
ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்குக் கிடைக்கும். இல்லாவிடில் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின்கல்விஎன்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாகக் கூறுகின்றார்.
கற்க கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத்தகஎன்று கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
எண்என்று சொல்லப்படுவதும்எழுத்துஎன்று சொல்லப்படுவதும் இவை இரண்டினையும் அறிந்தோர் சிறப்பு மிக்க மக்களின் உயிர்களுக்கு கண் என்று சொல்லப் படுவர். இந்த அளவிற்கு கல்வியின் சிறப்பு எடுத்துரைக்கப் படுகின்றது.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர்’.
கற்றவரின் நிறப்புப் பற்றி கூறும் போது ஒருவனின் முகத்திலுள்ள கண்ணானது கற்றவருக்குரிய அடையாளம் என்று சொல்லப்படுகிறது. அதே கண் இல்லாதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் கல்வியின் சிறப்பும் அதனைக் கற்றவனின் சிறப்பும் கூறப்படுகின்றது.
கல்வி உடையவர் எல்லா மக்களிடமும் நன்றாக பழகிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அவர்களுடன் சந்தோசமாக சேர்ந்து வாழ்வதையே விரும்புவர். இவர்களை பிரிக்கின்ற போது இனி நாம் எப்போது நாம் மீண்டும் சேர்வோம் என்ற நினைவிலேயேபிரிகின்ற தன்மை கற்றவரிடம் இருக்கும் தன்மையாகும்.
மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான். கல்வி என்பது ஆய்வு, கல்வி மூலம் சூழலை, அறிவை, சமூகத்தை, பண்பாடு, மரபை ஆராய்ந்து கொள்ளலாம்.
கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும் மரணிப்பதில்லை.
மேற்கூறிய வாசகத்தை ஆராய்ந்த போது கற்றவனின் சிறப்பைக் காணலாம். அதாவது இக் கல்விக்கா உயிர்கொடுத்தோர் மரணிப்பதில்லை. கல்வி கற்றவர் மரணித்து விடுவார். ஆனால் அவர் கற்ற கற்பித்த கல்வி இந்த உலகம் அழியும் வரை இருந்தே ஆகும்.
தான் இன்புறுவது உலகின் பிறர்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்.
ஒருவன் தான் கற்ற கல்வியின் இன்பத்தை உணர்ந்தானாயின் அவன் மீண்டும் கற்பதையே விரும்புவான். இது கல்வியின் பண்பாக கருதப்படு கிறது.
அறிவியற் ககல்வி, சமூக அறிவியற் கல்வி, ழேகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கும் அவசியமானவையாகும். ஒருவனு க்கு பெருமையையும் புகழையும் தரக்கூடிய செல்வம் கல்விச் செல்வமே அன்றி வேறில்லை.
கல்வி தொழிலுக்கம் வழி காட்டுகிறது. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்காக உதவும் கருவியாகும். அறிவியலும் சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம் படுத்தவும் ககல்வியை பயன்படுத்த வேண்டும்.
கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே கல்வி யானது ஒரு மனிதனின் முக்கிய தேவை யாக இருக்கி றது. எந்த வொரு சமூக மும் கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொறுத்த வரை மிகவும் தாழ் வாகவும் இழிவாகவும் கருதப் படும்.
எனவே இவ்வாறு பார்க்கும் போது கல்வியின் முக்கியத்து வத்தை அறிய முடிகின்றது. ஒருவன் கல்வி கற்றால் எவ்வாறு சமூகத்தில் மதிக்கப் படுகின்றான் என்பதை விளங்க முடியும். இவ்வாறு கல்வியை கற்று சமூகத்தில் சிறந்ததோர் பிரஜையாக வாழ கல்வி உதவுகின்றது.

Post a Comment

0 Comments