புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி

புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள 12 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

முப்பருவ முறை, தொடர் மதிப்பீட்டு முறை, பாடங்களில் முக்கியப் பகுதிகள் எவை, தேர்ச்சி விகிதத்தை எவ்வாறு அதிகரிப்பது போன்றவை தொடர்பாக பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது, பாடங்களைப் புதுமையாக எப்படி கற்பிப்பது போன்றவை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள், 2,353 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற்றது.

தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக தேர்வுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்க நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்தத் தடை உத்தரவை விலக்கிக் கொண்டது.

இதையடுத்து, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் தங்களுக்கான பணியிடங்களில் சேர்ந்தனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி: பள்ளிக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லை. இந்த மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு.... புதிதாகப் பணியில் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் 7 இடங்களில் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. சேலம், ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. புதன்கிழமை வரை ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

16 Comments

  1. Mr.Maniarasan and Sri sir,
    What about next TET? Is there any possiblties of 2nd list? Plz rply.

    ReplyDelete
    Replies
    1. பாலிரிக்கீகீகீ
      பழமிரிக்கீகீகீ
      பசியிரிக்கீகீகீ
      எங் கைல கல்லரிக்கீகீகீ

      நின்னுக்கோரிரிரிரிரியி வரனும்

      Delete

  2. Good Morning...

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? - ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் எதிர்பார்ப்பு - தி ஹிந்து
      இந்த ஆண்டு 2 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


      கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலாயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர “சி-டெட்” எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வையும், இதேபோல், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்குச் சேர ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வையும் (டெட்) எழுத வேண்டும்.

      கடைசியாக டெட் தேர்வு 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 17, 18-ந் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அதில் ஏறத்தாழ 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்பட்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவது நீதிமன்ற வழக்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

      தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) விதிமுறையின்படி, ஓராண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு தகுதித் தேர்வாவது நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் சி-டெட் தேர்வை சிபிஎஸ்இ இந்த ஆண்டு 2 சி-டெட் தேர்வுகளை நடத்தி முடித்துவிட்டது. முதல் தேர்வு கடந்த பிப்ரவரியிலும் 2-வது தேர்வு நேற்று முன்தினமும் நடத்தப்பட்டன.

      ஆனால், தமிழகத்தில் டெட் தேர்வை நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் தேர்வுக்கான அறிவிப்பையே வெளியிடவில்லை. தேர்வு தேதிக்கும் அறிவிப்புக்கும் சுமார் 3 மாதங்கள் காலஇடைவெளி இருக்க வேண்டும். அப்போதுதான் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் படிக்க முடியும்.

      வரும் டிசம்பர் மாதம் தேர்வு நடத்துவதாக இருந்தால் இந்த மாதமே (செப்டம்பர்) அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால், இன்னும் அதற்கான ஆயத்தப் பணிகளைக்கூட ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளவில்லை.

      அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர விரும்புவோர் “டெட்” தேர்வுக்கான அறிவிப்பினை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பிஎட் பட்டதாரிகளும் தற்போது இறுதி ஆண்டு மாணவ-மாணவிகளும் புதிய “டெட்” தேர்வுக்கான அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
      sri only for u at 9/30/2014 09:44:00 pm
      Share

      Delete
  3. ஏறத்தாழ 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்பட்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவது நீதிமன்ற வழக்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
    என்ன செய்தி இது தப்பு தப்பா. ஈயடிச்சான் காப்பி படிச்சி பாத்து வெளியிடுங்கப்பா

    ReplyDelete
  4. வணக்கம் நன்பர்களே
    அனைவரும் Training முடிந்திருப்பீர்கள் திங்கள் அன்றும் விடுமுறை ஆரம்பமே அசத்தல்தான் கலக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. ரமேஷ் சார் கல்யாணத்துக்கு எல்லோரையும் கூப்பிடணும்... மறந்துடாதீங்க...

      Delete
    2. மிக்க நலம் ரவிசங்கர் நண்பரே.. நீங்கள்...

      Delete
  5. Ya....happy holidays friends

    ReplyDelete
  6. Reply me...wht abt bt assistant salary?..I hav m.sc...m.ed...working in an urban school...

    ReplyDelete
    Replies
    1. தெரிஞ்சா சொல்லியிருக்க மாட்டோமா...

      Delete
  7. அடங்கப்ப டிரெயினிங் முடிச்சு வெளில வந்தா 1000 பேர் பஸ்சுக்கு நிக்குறாங்க
    கிருஸ்னகிரில இருந்து சேலம் வரதுக்கே மணி 9.50 இனி நான் கோயம்புத்தூர் போறக்கு நைட்டு ரென்டாயிரும் போலிருக்கு
    கூட்ட நெரிச்சல்ல எவனோ நாத்தமுத்து அடிக்கடி லீலைய காட்ட முடியலடா சாமி
    பஸ்ல பத்து நிமிசம் கண்ண மூட முடியல தீபாவளி பிஜிலி வெடி மாதிரி கன்டினீயூசா
    நல்ல வேல ஏசி பஸ்சில்ல
    சை என்ன கொடுமடா இது

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..