தொழில் செய்ய விரும்பு

வளரும் இந்தியாவில் தொழில் வாய்ப்புகள் வெகுவாக உள்ளன. அடுத்த கால் நூற்றாண்டிற்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு குறை ஏதும் இருக்காது. அதே போல் தொழில் செய்ய விரும்புபவர்களின் வாய்ப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. இன்றைய உலகில் தொழில்கள் பல விதமாக உள்ளன.


சிறிய சிறிய ஆப்ஸ் (APPS) என்று கூறக் கூடிய மென்பொருட்களை உண்டு பண்ணி பல மில்லியன்/ பில்லியன் டாலர்களுக்கு விற்கும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு உதாரணமாக வாட்ஸப் (WHATSUP) என்ற மொபைல் மெஸ்ஸேஜிங் (MOBILE MESSAGING) மென்பொருளை (SOFTWARE) உருவாக்கின்றன. 19 பில்லியன் டாலர்களுக்கு விற்ற சம்பவத்தை சமீபத்தில் நீங்களெல்லாம் கேள்விப் பட்டிருப்பிர்கள். இதுபோல் சிற்சில பெரிய வாய்ப்புகளும், பற்பல சிறிய வாய்ப்புகளும் ஏராளமாய் நம் கண் முன்னால் உள்ளன.
இவற்றை எல்லாம் அறிந்து ஆராய்ந்து நாம் தொழில் செய்யும் போது கோடீஸ்வரர் ஆவது என்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. இன்றைய இளம் வயதினர் மற்றும் நடு வயதினர் பலருக்கும் தொழில் செய்யும் ஆசை ஏராளமாய் உள்ளது. அதே சமயத்தில் சற்று பயமும் அவர்களிடையே உள்ளது. தெளிவான ஞானம் மற்றும் திட்டமிடல் இருக்கும்போது இந்த பயங்களை வென்று நாம் சாதனை படைப்பது எளிதாகின்றது.
புதிய தொழில் தொடங்குவது என்பது எல்லோரும் சாப்பிடக்கூடிய வாழைப்பழம் அல்ல. உங்களுக்கு உண்மையிலேயே தொழில் துவங்குவதில் விருப்பம் உள்ளதா என்று அறிந்து கொள்ளுங்கள். உறவி னரோ அல்லது நண்பரோ தொழில் துவங்கி பெரியளவில் பணம் சம்பாதித்து விட்டார்கள் என்பதற்காக நீங்கள் தொழிலில் இறங்காதீர்கள். நீங்கள் செய்யப்போகும் தொழிலையும், அதில் தினசரி உள்ள செளகரியம் மற்றும் அசெளகரியங்களையும் கனவு கண்டுபாருங்கள்.
உங்களுக்கு லாபமே கிடைக்கா விட்டாலும் அத்தொழிலை நீங்கள் செய்ய விரும்புவீர்களா என்று எண்ணிப்பாருங்கள். நீங்கள், செய்யப்போகும் தொழிலை கட்டாயமாக காதலிக்க வேண்டும்; அத்தொழிலுடன் காதல் வயப்படா விட்டால் தொழிலில் இறங்குவது உகந்தல்ல.
ஒரு காலத்தில் பணம், சொந்தபந்தங்கள், சுற்றுவட்டாரம் போன்றவைகளே தொழில் துவங்குவதற்கு முக்கியமாக இருந்தன. ஆனால் இன்றோ தொழில் துவங்குவதற்கு மூன்று விஷயங்கள்தான் முக்கியம். அவையாவன 1)விருப்பம் 2)விருப்பம் 3)விருப்பம்.
ஏனென்றால் இன்றைய இந்திய பொருளாதாரச் சூழலில் ஐடியாக்களுக்கு பஞ்சம் இல்லை; முதலீட்டாளர்களுக்கு பஞ்சம் இல்லை; நல்ல தரமான ஊழியர்களுக்கும் பஞ்சம் இல்லைஇவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துக் செல்லக்கூடிய உங்களைப் போன்றோர்களுக்குதான் இன்று நாட்டில் பஞ்சம். எந்த காலக்கட்டத்திலும் இல்லாத அளவிற்கு இன்று இந்தியாவில் முதல் தலைமுறை தொழில் அதிபர்கள் உருவாகி வருகிறார்கள்.
அடுத்த கால்நூற்றாண்டிற்கு இது போன்ற வளர்ச்சி இருந்து கொண்டுதான் இருக்கும். ஆகவே தொழில் துவங்கும் வாய்ப்புகளுக்கு பஞ்சமே இருக்காது. இதில் நீங்கள் உங்களை எங்கு அமர்த்தி கொள்கிறீர்கள் என்பதில் தான் உங்களுடைய உயர்வு அமையும்.
இந்தியா வேளாண் பொருளாதாரத்தில் இருந்து பெரிய அளவிற்கு உற்பத்தி பொருளாதாரத்தில் நுழையாமலேயே, சேவை பொருளாதாரத்திற்கு சென்றுவிட்டது. இன்று நமது நாட்டு மொத்த உற்பத்தியில் 64.8% (கட்டுமான சேவையையும் சேர்த்து) சேவை பொருளாதாரத்திலிருந்து வருகிறது.
உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியர்கள் மிகவும் அறிவுள்ளவர்கள் மற்றும் திறமைசாலிகள். அதிலும் தமிழர்களை பற்றி கேட்கவே வேண்டாம்! அவர்களது உழைப் பிற்கும், அறிவிற்கும், ஒழுக்கத்திற்கும் வேறு எவராலும் ஈடு செய்ய முடியாது. இவ்வளவு குணாதிசயங்கள் கொண்ட நாம் தொழில் தொடங்குவதே மிகவும் சரியானதாக இருக்கும்.
தொழிலில் நுழைபவர்கள் எவ்வாறு திட்டமிடுவது, எவ்வாறு தங்களது பயங்களை போக்குவது, நிதியை எவ்வாறு திரட்டுவது, கணக்குகளை எவ்வாறு வைத்துக் கொள்வது போன்ற பலவற்றைப் பற்றியும் தொடர்ந்து காண்போம்.
சொக்கலிங்கம் பழனியப்பன் – prakala@gmail.com

Post a Comment

16 Comments

  1. செல்போனில் படம் எடுப்பதால் என்ன ஆபத்து? :-
    ++++++++++++++++++++++++++++++++++++++++

    என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா… வெயிட்… உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

    அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. ‘செல்போனில் இருந்து Delete செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.

    அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.

    ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு Delete செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

    இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை Delete செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.

    இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ… என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் Delete செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

    அந்த புதிருக்கான விடையின் பெயர் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர்.

    மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.

    இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்களின் பின்னணி என்ன? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் நண்பர் விரிவாகச் சொல்கிறார்.

    ReplyDelete

  2. ”செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் Delete செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.

    அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் Delete செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

    சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன Delete செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல ‘ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். இந்த மாதிரியான ‘ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

    இதைத் தவிர்க்க என்ன செய்வது?

    முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

    இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்… ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

    அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் ‘வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!

    ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்… உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

    இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்…!

    உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் !

    பொறுப்பும் ! பொதுநலனும் !

    உங்கள் jayaram

    ReplyDelete
  3. thank u for the information sir

    ReplyDelete
  4. Gud mrng to all friends,,all msgs r super jai sir,,

    ReplyDelete
  5. 😃'wife; I'm going to London.
    Do u want any gift?
    Husband: what I ask you can't bring
    Wife : just ask n then see.
    Husband : I want A British Girl..
    wife:ok...
    Wife returns
    husband: where is d gift?
    wife: wait for 9 months!!!!!!!!'☺😜😃

    ´´´´´████████´´´´
    ´´`´███▒▒▒▒███´´´´´
    ´´´███▒●▒▒●▒██´´´
    ´´´███▒▒▒▒▒▒██´´´´´
    ´´´███▒▒💋▒▒██´
    ´´██████▒▒███´´´´´
    ´██████▒▒▒▒███´´
    ██████▒▒▒▒▒▒███´´´´
    ´´▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▒´´
    ´´▒▒▒▒▓▓▓▓▓▓▓▓▓▒´´´´´
    ´.▒▒▒´´▓▓▓▓▓▓▓▓▒´´´´´
    ´.▒▒´´´´▓▓▓▓▓▓▓▒
    ..▒▒.´´´´▓▓▓▓▓▓▓▒
    ´▒▒▒▒▒▒▒▒▒▒▒▒
    ´´´´´´´´´███████´´´´
    ´´´´´´´´████████´´´´´´
    ´´´´´´´█████████´´´´´
    ´´´´´´██████████´´´
    ´´´´´´██████████´´
    ´´´´´´´█████████´
    ´´´´´´´█████████´
    ´´´´´´´´████████´´´
    ________▒▒▒▒▒
    _________▒▒▒▒
    _________▒▒▒▒
    ________▒▒_▒▒
    _______▒▒__▒▒
    _____ ▒▒___▒▒
    _____▒▒___▒▒
    ____▒▒____▒▒
    ___▒▒_____▒▒
    _███______▒▒
    █_███____███
    █__███_ _█_███
    █ ███
    New one. Don't just laugh. Pass it on to others.

    ReplyDelete
  6. இது விழுப்புரம நிருபர் ஜோதி அவர்களின் பதிவு தோழர்களே வணக்கம்..
    ஆங்கில புத்தாண்டு 2015 துவங்கியிருக்கிறது.எனக்கு பெரும்பாலும் இந்த புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் உடன்பாடு கிடையாது.ஆண்டு என்பது ஒரு பதிவு அவ்வளவுதான்.அதனால் அதை தவிற்கவேண்டுமென்றும் நான் சொல்லவில்லை.புத்தாண்டில் நான் விரும்புவது கடந்த ஆண்டில் இருந்து நாம் எப்படி மாருபடவேண்டும் என்று தீர்மானித்தால் அது வரவேற்கவேண்டியது.2014 கடைசி நாள் நேற்று மாலை 6 மணிக்கு மேல் இருக்கும் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தேன்.அரை மணிநேரமாக போக்குவரத்து சீராக வில்லை நண்பர்களுடன் சென்று பார்த்தால் ஒரு பேருந்து விபத்து கீழே ஒரு 60 வயது மதிக்க தக்க ஆண் அடிபட்டு கிடந்தார் விசாரித்ததில் சாலையில் வரும்போது விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.பேசிக்கொண்டிருக்கும் போதே உடன்வந்த தம்பி காரல்மார்கஸ் “அண்ணே இவருக்கு உயிர் இருக்குன்னே”என்றார் தலையில் அடி மூச்சுவிடுகிறார்.உடனே 108 ஆம்புலன்சுக்கு போன் போட்டோம் அவர்கள் விசாரித்து உடனே அனுப்பிவிடுவார்கள் என்பதில் எங்களுக்கு துளி கூட நம்பிக்கையில்லை.விசாரித்ததில் அடிபட்ட அந்த நபர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளராம்.பெயர் கிருஷ்ணமூர்த்தி.உடனே விழுப்புரம் எஸ்.பிக்கு போன் செய்தோம் அவரின் உதவியாளர்தான் எடுத்தார் விபரத்தை சொன்னோம் அவர் எஸ்.பியிடன் சொன்னாரோ இல்லையோ.யாரும் உதவிக்கு வரவில்லை.அந்த பக்கத்தில் நின்றிருந்த எல்லா வண்டிகளை கேட்டுப்பார்த்தோம் யாரும் உதவிக்கு வரவில்லை கோஞ்சம்,கொஞ்சமாக அவர் இறந்து கொண்டிருக்கிறார்.ஒரு ஆட்டோகாரர் வந்தார் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டோம்.கோலியனூரில் ஆட்டோ விளக்கு எரியவில்லை.அதற்குமேல் ஆட்டோ செல்லமுடியாது உடனே அந்த வழியாக சென்ற ஒரு டாட்டா ஏசி வண்டியை வழிமறித்து அவரை அதில்கிடத்திகொண்டுபோனோம் மருத்துவமனைக்கு வந்துவிட்டோம்.மருத்துவர் நாடியை பிடித்து பார்த்தார்.கடைசி மூச்சுதான் இருக்கு முயற்சி செய்யலாம் என முயற்ச்சித்தார்.கொஞ்ச நேரத்தில் கிருஷ்ணமூர்த்தி இறந்து போனார்” ஒரு 20 நிமிடம் முன்னாடி கூட்டிவந்திருந்தீங்கன்னா அவரை காப்பாத்தி இருக்கலாம் சார்” என்றார் மருத்துவர்.நானும் மார்க்சும் மட்டும் கிருஷ்ணமூர்த்தியை காப்பாற்ற நினைக்க வில்லை இரண்டு பெயர்தெரியாத நண்பர்களும் எங்களோடு போராடி மருத்துவமனை வரைக்கும் வந்தார்கள்.அவர்கள் பெயரைகூட நாங்கள் கேட்கவில்லை.மனிதத்திற்கு பெயர் கிடையாது என்பதற்கு அவர்கள் உதாரணம்.கனத்த இதயத்தோடு மருத்துவமனையை விட்டு வெளியேரினோம்.கிருஷ்ணமூர்த்தி என்ன கணவுகளோடு வந்திருப்பார் ஒரு 20 நிமிடம் கூட அவருக்கு இல்லாமல் போய்விட்டதே.அவரை பார்த்துக்கொண்டு சென்றவர்கல் அப்படி என்ன சாதித்திருப்பார்கள்.”ஒரு போலீஸ்காரர் வந்தார் சார் உங்க பேரை சொல்லுங்க உங்க செல்நெம்பரை கொடுங்க “ என்றார் அவருக்கு பின்னால் சுவற்றில் ஒரு வரி எழுதியிருந்தது,காவல்துறை உங்கள் நண்பன்”என்று அப்போ கிருஷ்ணமூர்த்திக்கு என எனக்குள் கேள்வி எழுந்தது.2014 லோடு இது போன்ற சம்பவங்கள் முடிந்து போகட்டும்.2015 ல் ஆவது மனிதம் காப்போம்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. HI JEYARAM ENAKU BOY FDS YARUM ILLAPA APPADI ELLAM NA PH PESAMATEN ELLORA MATHIRIUM ENNAI NINAIKATHINGA YESTERDAY JUST UNGALAI KETEN SORRY

    ReplyDelete
  8. SUDAR MADAM GOOD MORNING NALLA IRUKINGALA MAIL CHEK PANUGA

    ReplyDelete
  9. JEYARAM SIR UNGALUKU MAIL SEND PANIRUKEN ANSWER PANUGA PLEASE

    ReplyDelete
  10. அழிக்கப்பட்ட ஃபைல்களை மீண்டும் பெற...
    ‘அய்யோ மெமரி கார்டுல வெச்சிருந்த ஃபோட்டோஸ் எல்லாம் போயிருச்சே’,  ‘என்னனே தெரில திடீர்னு கம்ப்யூட்டர்ல இருந்த ஃபைல்ஸ் எல்லாம்  டெலிட் ஆயிருச்சு’ - இப்படி அடிக்கடி பதற நேரிடலாம். இதோ... அழிந்த கோப்புகளை மீட்டெடுக்க ஓர் எளிய வழி!

    உங்களது மெமரி கார்டு, ஹார்டு டிஸ்க், ஐபேடு போன்ற சேமிப்பகங்களில் உள்ள ஆவணங்கள், கோப்புகள், தரவுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தவறுதலாக டெலிட் ஆகிவிட்டால், அல்லது தானாக அழிந்துவிட்டால்... அதனை ‘Recuva’ எனும் மென்பொருள் மூலமாக மிக சுலபமாக மீட்க முடியும்!

    இந்த மென்பொருளானது, உங்கள் சேமிப்புக் கருவிகளிலுள்ள அழிந்த ஃபைல்களை, அது எத்தகைய கோப்புகளாக இருந்தாலும் சரி... அதாவது ஆவணங்கள், கோப்புறைகள், படங்கள், காணொளிகள், பாடல்கள், புகைப்படங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் சுலபமாக மீட்டுத் தருகிறது.

    எப்படி மீட்பது..?

    ‘Recuva’ என்ற மென்பொருளை உங்களது கணினியில் டவுன்லோடு செய்து, இன்ஸ்டால் செய்யவேண்டும். பின் அதன் மூலமாக ஸ்கேன் செய்து தேடி அழிந்த ஃபைல்களை மீட்டெடுத்துவிடலாம். இதில், வைரஸால் அழிந்துபோன ஃபைல்களும் அடங்கும். இதனை இணைய உதவியோடு இலவசமாக டவுன்லோடு செய்ய

    'http://www.filehippo.com/download_recuva/download/4c4c59967cbad2dfb1da58bb14e33b7a/ என்ற லிங்க்கை பயன்படுத்தலாம். அல்லது கூகுள் போன்ற தேடுபொறிகளைக் கொண்டும் இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.

    ReplyDelete
  11. 🍎பழங்கள்,
    🍆காய்கறிகள்,
    🍀மூலிகைகளின்.. Ⓜ️மருத்துவக் குணங்கள்;

    1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
    2) இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.
    3) மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
    4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி).
    5) நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
    6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.
    7) உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
    8) மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.
    9) ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.
    10) கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.
    11) மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.
    12) நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.
    13) வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.
    14) நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.
    15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.
    16) மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.
    17) சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.
    18) ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.
    19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.
    20) ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.
    21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.
    22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
    23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
    24) மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.
    25) முகம் அழகுபெற திராட்சை பழம்.
    26) அஜீரணத்தை போக்கும் புதினா.
    27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
    28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..