பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அண்ணா பல்கலை. முடிவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 400-க்கும் அதிகமான பேராசிரியர், உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பணி நியமனத்துக்கு அரசின் நிதிக் குழு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அதற்கான பணிகளை பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது: பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் ஏராளமாகக் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப அரசின் நிதிக் குழு அண்மையில் அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து, எந்தெந்தக் கல்லூரிகளில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளன என்பதைக் கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகளில் 400-க்கும் மேற்பட்ட பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் என்று தெரிகிறது.

காலிப் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டவுடன் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கான அறிவிப்பு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றார்

Post a Comment

1 Comments

  1. காலைவணக்கம்
    இன்றையபொழுது ஏமாற்றாமல் பணிநியதடை உடைய இறைவனிடம் கையேந்துவோம்

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..